எக்காரணம் கொண்டும் விடுவிக்கக்கூடாது.. ஆணவக்கொலை வழக்கில் 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி நிபந்தனை!
மன்னார்குடி ஆணவக்கொலை வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
திருவாரூர்: மன்னார்குடி ஆணவக்கொலை வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுவிக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடித்த கீழமருதூரை சேர்ந்த பழனியப்பன் - அமிர்தவள்ளி தம்பதி காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டதால் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்டனர்.

அவர்களின் பிறந்த ஒரு மாத குழந்தையும் கொலை செய்யப்பட்டது. இந்த வழக்கில் பழனியப்பனின் சகோதரர்கள் சிவசுப்பிரமணியம், ராமகிருஷ்ணன், துரைராஜ் மற்றும் மகேந்திரன் ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார்.
சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் ஆகிய இருவருக்கும் தலா 30 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை நன்னடத்தை, பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கக்கூடாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் நிபந்தனை விதித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications