ஏடிஎம்களில் போதிய பண இருப்பு உறுதி செய்யப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை: மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளம் அருகே ஏடிஎம்களில் போதிய பண இருப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 8ம்தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அன்று முதல் இன்று வரை ஏழை முதல் பணக்காரன் வரை தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற வங்கிகள் முதல் ஏடிஎம்கள் வரை இரவு பகல் என்று பாராது கால் கடுக்க காத்துக்கிடக்கின்றனர். இன்றுடன் 10வது நாள் ஆகியும் வங்கிகளில் இன்னும் கொஞ்சம் கூட கூட்டம் குறையவில்லை. ஏடிஎம் செயல்பாடுகளும் முழு அளவில் இல்லை. சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே செயல்படுகிறது என்றாலும் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரத்திலேயே பணம் தீர்ந்து விடுகிறது. இதே நிலையே நீடிப்பதால் மக்கள் பணம் எடுக்க கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏடிஎம்களில் பணமில்லாததால் தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்களும், துறைமுக தொழிலாளர்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக ஏடிஎம்களில் போதுமான பண இருப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மீன்பிடி துறைமுகம், இறங்குதளத்தில் நடமாடும் வங்கி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications