டெங்கு கட்டுக்குள் தான் இருக்கிறது... சொல்வது துணை முதல்வர் ஓபிஎஸ் - வீடியோ
தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுக்குள் தான் இருக்கிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் கூறியுள்ளார்.
மதுரை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெங்குக் காய்ச்சல் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆகையால் டெங்குக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால், சிலர் வாய்க்கு வந்தபடி டெங்கு மரணங்கள் குறித்து தவறான புள்ளிவிவரங்களைக் கூறிவருகின்றனர் என கூறினார்.
ஆனால், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் சராசரியாக 10 பேர் டெங்குவுக்கு பலியாகின்றனர். அதுமட்டுமில்லாமல் டெங்குவுக்கு மருந்து இல்லை என குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.