ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. சதுரகிரி மலைக்கு செல்ல தடை!
ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
விருதுநகர்: ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[விடாமல் கொட்டி தீர்த்த மழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!]

அமாவாசை
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் அமாவாசை நாளில் சதுரகிரி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
இம்மாதம் வரும் 8ஆம் தேதி அமாவாசை வருகிறது. இந்நிலையில் 7 ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆட்சியர் தடை
சதுரகிரி, சாஸ்தா, அய்யனார் கோவில் ஆற்றுப்படுகைகளுக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் விருதுநகர் ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

நீர்வரத்து அதிகரிப்பு
மேலும் அக்டோர் 10 ஆம் தேதி வரை ஆற்றை கடந்து கோவில்களுக்கு செல்லக்கூடாது என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications