27 எருமை மாடுகள்.. 31 கிடாய்களை பலியிட்டு ரத்தம் குடித்த பக்தர்கள்.. சிவகங்கையில் மிரட்டல் திருவிழா!
சிவகங்கை பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழா நடந்தது.
Recommended Video

சிவகங்கை: பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள பையூர் பழமலை நகரில் நரிக்குறவர் (காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரை வீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களின் குல தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து கடந்த 20ம் தேதி காப்பு கட்டினர். இன்று மது எடுப்புடன் இந்த திருவிழா நிறைவடையும்.

எருமைகளை பலியிட்டு
இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் உள்ள முதல் மாடு தலையை அசைத்து சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்து, அதை பலியிட்டனர்.

கழுத்தில் வெட்டப்பட்ட மாடுகள்
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன.
நீண்ட வாள் மற்றும் அரிவாளால் எருமை மாடுகளின் கழுத்தில் வெட்டப்பட்டன.

ரத்தத்தை குடித்தனர்
கழுத்தில் வெட்டியவுடன் அதிலிருந்து பீச்சியடிக்கும் ரத்தத்தை பூசாரி உட்பட காப்புக் கட்டியவர்கள் அனைவரும் குடித்தனர். காளியை வணங்கியவர்கள் எருமை, பிற தெய்வங்களை வணங்கியவர்கள் ஆடுகளை பலியிட்டனர்.

27 எருமைகள்
இவ்வாறு 27 எருமை மாடுகள் மற்றும் 31 ஆட்டு கிடாய்கள் வெட்டி பலியிடப்பட்டன. இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது கடந்த 2013ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு இவ்விழா நடத்தப்பட்டது.

ரத்தம் குடிக்கும் காரணம்
காளி அசுரனை (எருமை) வதம் செய்த போது, தரையில் சிந்திய ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும், அதனால் அதை சிந்த விடாமல் குடித்து விடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications