மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம்! தருமபுரம் ஆதினம் அறிவிப்பால் பரபரப்பு!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினம் சார்பில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட இலவச மருத்துவமனையை இடிப்பதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என தருமபுரம் ஆதினத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இது 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதினத்தின் 24 ஆவது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் அவருடைய தாயின் நினைவாக ஆதினத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார்.

8 ஆண்டுகள் கட்டுமான பணி நிறைவடைந்து மருத்துவமனையானது கடந்த 1951 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் குமாரசாமி ராஜா திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் தருமபுரம் ஆதினம் ஒப்படைத்தது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த மருத்துவமனை கட்டடம் பழுதடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த கட்டடத்தை தங்களிடமே ஒப்படைக்குமாறு தருமபுரம் ஆதினத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆதினம் எழுதிய கடிதத்திற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த மருத்துவமனையை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம் என ஆதினம் கூறியிருந்தார். அதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அந்த கட்டடத்தை இடிக்க நாளை பூமிபூஜை போடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தருமபுரம் ஆதினம் சார்பில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் "இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப் போவதாக முன்பு தகவல் வந்தது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப் பெற்றது. மீண்டும் நாளை பூமி பூஜை போடுவதாக அறிந்தோம். வெளியூர் நிகழ்வில் இருக்கிறேன் இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம்". இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications