புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேரும் புழல் சிறையில் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை: சென்னை புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து போக்குவரத்து சரி செய்தனர். இருப்பினும் கௌதமன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அன்று மாலையே புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 6 பேரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கௌதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications