புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேரும் புழல் சிறையில் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை: சென்னை புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் உள்பட 6 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினர். இதனால் முக்கிய பாலமான அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து போக்குவரத்து சரி செய்தனர். இருப்பினும் கௌதமன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீஸார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோருக்கு 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து அன்று மாலையே புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 6 பேரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 2 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கௌதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications