முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்ததால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடிரீர் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக கூறி சில நிறுவனங்களை சீல் வைத்து அரசு மூடியுள்ளது.

மேலும் ஜிஎஸ்டியில் 18% வரி விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன்களின் விலை அதிரடியாக உயர்ந்தது.
குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் கேன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர். ஏற்கனவே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர்கேன்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மக்கள் திணறி வந்தனர்.
இந்நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வேலை நிறுத்தம் திரும்பப்பெறப்பட்டது. என்று'கிரேட்டர்' தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க காப்பாளர் முரளி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக நிதியமைச்சர் ஜெயக்குமாரை நாளை மதியம் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications