சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் விடுமுறை அறிவிப்பதாக கலெக்டர் லலிதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

மயிலாடுதுறை பாதிப்பு
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. சீர்காழியில் மட்டும் வரலாறு காணாத வகையில் மழை பதிவானது. 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீர்காழியில் மழை பதிவானது. ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது.

நிவாரண முகாம்களில் மக்கள்
மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் பள்ளிகளில் தண்ணீர் நுழைந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினர்.

கலெக்டர் அறிவிப்பு
இந்நிலையில் தான் சீர்காழியில் பல்வேறு பள்ளிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அங்கு சென்று படிக்க இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே சீர்காழி தாலுகா பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications