சட்டசபைக்கு அரபுநாட்டு கைதிபோல் பிடித்து வரப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. துரைமுருகன் காட்டம்
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அரபுநாட்டு கைதிபோல் அதிமுக எம்எல்ஏக்கள் பிடித்து வரப்பட்டனர் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
காஞ்சிபுரம்: பிப்ரவரி 18ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;
எடப்பாடி பழனிச்சாமி அமைத்த அமைச்சரவைக்கு நம்பிக்கைக் கோரி தீர்மானம் ஒன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானமே தப்பு. காரணம் இந்த அமைச்சரவையின் மீது இந்த மாமன்றத்தின் நம்பிக்கையை கோருகிறது என்று தீர்மானத்தில் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் நம்பிக்கை வைத்து தெரிவிக்கவும் என்று இருந்தது.

அசாதாரண சூழல்
அசாதாரண சூழலை ஒரு ஆட்சி போய் இன்னொருவர் முதல்வராக பொறுப்பேற்று பலத்தை நிரூபிக்க நம்பிக்கை கோருவது அவசியம். அப்போது சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக விடவேண்டும். அப்படி இல்லாமல், அதிமுக எஎம்எல்ஏக்கள் அனைவரும் சட்டமன்றத்திற்கு சுயமனப்பான்மையோடு வரவில்லை.

அரபு நாட்டு பிணைக் கைதிகள்
அரபு நாட்டு அடிமைகளை பிணைக் கைதிகளை பிடித்து வருவது போல், சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களை ஒரு தனிக்காட்டில் வைத்து போன்களை எல்லாம் பிடிங்கி வைத்துக் கொண்டனர். வேறு எதிலும் கவனம் சென்று விடாதபடி அவர்களுக்கு தேவையானவற்றை சப்ளை செய்து நேராக சட்டமன்றத்திற்கு கூட்டி வந்தார்கள். இது துப்பாக்கி முனையில் ஓட்டு வாங்குவதற்கு சமம்.

கோரிக்கை
எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். தங்களது மனைவி மக்களிடம் கூட பேச முடியாத அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வாக்கு வாங்க எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எனவே, இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து நடத்த வேண்டும் என்று கோரினோம்.

மறுத்த சபாநாயகர்
இரண்டாவது கோரிக்கையாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினோம். மறைமுக தேர்தல் நடத்த சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லி சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது என்று துரைமுருகன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications