ஈரோட்டில் இ-கோர்ட் – வக்கீல்களுக்கு வழக்கு குறித்த தகவல்கள் இனி எஸ்.எம்.எஸ் மூலம் வரும்!
ஈரோடு: நீதிமன்றத்தில் வழக்குகள் குறித்த தகவல்களை வழக்கறிஞர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கும் இ-கோர்ட் நடைமுறை ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட, கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் இத்திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய முறைப்படி "சி.ஐ.எஸ்" என்ற மென்பொருளைக் கொண்டு நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த மையத்தில் வழக்கறிஞர்கள் தாங்கள் ஆஜராகும் வழக்கு மற்றும் தங்களின் விவரம் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்த வழக்கறிஞர்களுக்கு வழக்கு எண், வழக்கு விவரம், வாய்தா தேதி போன்ற தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக ஈரோட்டில் இதுவரை 150 வழக்கறிஞர்கள் தங்களின் செல்பேசி என்னை பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இ-கோர்ட் முறையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.பி.இளங்கோ தொடங்கி வைத்தார். இத்திட்டம், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் இந்த முறை படிப்படியாக பரவலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications