ஈரோட்டில் இ-கோர்ட் – வக்கீல்களுக்கு வழக்கு குறித்த தகவல்கள் இனி எஸ்.எம்.எஸ் மூலம் வரும்!
ஈரோடு: நீதிமன்றத்தில் வழக்குகள் குறித்த தகவல்களை வழக்கறிஞர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கும் இ-கோர்ட் நடைமுறை ஈரோடு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மின்னணு தகவல் பரிமாற்ற முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட, கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் இத்திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த புதிய முறைப்படி "சி.ஐ.எஸ்" என்ற மென்பொருளைக் கொண்டு நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த மையத்தில் வழக்கறிஞர்கள் தாங்கள் ஆஜராகும் வழக்கு மற்றும் தங்களின் விவரம் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்த வழக்கறிஞர்களுக்கு வழக்கு எண், வழக்கு விவரம், வாய்தா தேதி போன்ற தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் வழக்கின் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக ஈரோட்டில் இதுவரை 150 வழக்கறிஞர்கள் தங்களின் செல்பேசி என்னை பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய வழக்குகள் குறித்த விவரங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இ-கோர்ட் முறையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.பி.இளங்கோ தொடங்கி வைத்தார். இத்திட்டம், மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களிலும் இந்த முறை படிப்படியாக பரவலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications