ஒரு அனுதாப செய்தியை சொல்லக்கூட மோடிக்கு நேரமில்லையே.. ஈவிகேஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோடியால் ஒரு அனுதாப செய்தியை கூட சொல்ல முடியவில்லை என்பது வேதனைக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த வாரம் முதல் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட சேதம் அதிகம். இதுவரை மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஒரு அனுதாப செய்தி கூட சொல்லவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இளங்கோவன், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஒரு அனுதாப செய்தியைக் கூட மோடியால் கொடுக்க முடியவில்லை. இவ்வளவு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதும், மத்திய அரசு அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யவில்லை. மத்திய அரசும் ஒரு இரங்கல் செய்தியைக் கூட வெளியிடவில்லை. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற இந்த சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் பொறுப்பற்றத் தன்மையில் இருப்பது வேதனைக்குரியது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications