காவல் நிலையத்திலேயே என்கவுண்டர் செய்யும் அளவுக்கு போலீஸுக்கு சுதந்திரமா?: விஜயகாந்த்
சென்னை: இதுநாள் வரையிலும் காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்கு புறமான மலைபகுதிகளுக்கு அழைத்து சென்று கொலை செய்தனர். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யும் அளவிற்கு இந்த ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என தெரியவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் குற்றவாளி ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை. தமிழகம் முழுவதும் அப்பாவிகளும், சிறு சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களும், வன்முறை வழக்கில் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர் என்ற புகார் பரவலாக எழுந்துள்ளது.
உண்மையாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. பெயரளவிற்கு மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பேருந்தை கொளுத்தியவர்கள், கடைகளை அடித்து நொறுக்கியவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என அனைவருமே சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய காவல்துறை கைகட்டி, வாய்மூடி மவுனியாக வேடிக்கை பார்க்கிறது.
தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலைகளுக்கு பஞ்சம் இல்லை, கொள்ளையும், திருட்டும் சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி வழங்குவதில்லை. இந்த அளவில் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதே என்று தமிழக மக்கள் எண்ணுகின்ற வேளையில், தற்போது நடந்துவரும் சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்சி அடைய செய்துள்ளது. நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது காவல்துறையின் கொடூர ஆட்சியா? என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுக்கா, எஸ்.பி.பட்டிணத்தை சார்ந்த செய்யது முகமது என்ற இளைஞரை, தகராறு செய்ததாக சொல்லி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கே கடுமையாக தாக்கப்பட்டு, அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் காளிதாஸ் என்பவர் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறார். இதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இதுநாள் வரையிலும் காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்கு புறமான மலைபகுதிகளுக்கு அழைத்து சென்று கொலை செய்தனர். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யும் அளவிற்கு இந்த ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒரு சிறுவனை காவல் ஆய்வாளர் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்ற காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இச்செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன். காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் காவல்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications