தலைமைச் செயலகத்தில் காலடி வைத்த முதல் நாளே, அதிகாரிகளை 'ஆட்டம்' காண வைத்த தினகரன்!
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புடைசூழ, அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் தள்ளுமுள்ளுக்கு இடையே தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
Recommended Video

சென்னை: சபாநாயகர் தனபாலன் அறையில் தொண்டர்கள் புடைசூழ நுழைந்த தினகரன், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் தலைமைச்செயலகம் முழுவதும் சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
எத்தனையோ பதவியேற்புகள் நடைபெற்ற இந்த தலைமை செயலகத்தில் இன்று தினகரனின் பதவியேற்பும் எளிமையான முறையிலும், அதே சமயம் தள்ளுமுள்ளுகளுக்கு இடையேவும் நடைபெற்றது.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடப்போகும் ஆரம்பமாக தினகரனின் பதவியேற்பு நிகழ்வு கருதப்படுகிறது. தீவிர ஆன்மீக பற்றாளரான தினகரன், இன்று வைகுண்ட ஏகாதேசி என்பதாலே இன்றைய தினத்தில் பதவியேற்க முடிவு செய்தார்.

அதிகாரிகள் நிலை
ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ சபாநாயகர் தனபாலனின் அறைக்கு வந்த தினகரன், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். சில நொடிகளிலே சபாநாயகரின் அறை நிரம்பிய நிலையில், அமர்ந்திருந்த அதிகாரிகளின் நாற்காலிகள் அனைத்தும் கூட்ட நெரிசல் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளப்பட்டு அவர்கள் எழுந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

நாற்காலி போச்சே
பலமுறை அதிகாரிகள் கூறியும் நகர்ந்து போகாத ஆதரவாளர்களை தினகரன் எதிரில் திட்டவும் முடியாமல், நாற்காலியில் அமரவும் முடியாமல் அதிகாரிகள் கூட்டமிகுந்த கோயிலின் தர்ம தரிசனத்தில் சிக்கியது போல மாட்டிக்கொண்டனர்.

கோஷங்கள்
ஒரு கட்டத்தில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் "இது ஆரம்பம் தான் இனிதான் ஆட்டமே... வருங்கால தலைமைச்செயலகமே" என கோஷமிட்டபடி பின்னாடியே போனது தினகரன் காதில் விழுந்ததோ இல்லையோ, கண்டிப்பாக அந்த அதிகாரிகளின் காதில் விழுந்திருக்கும்.

போலீசார் குவிப்பு
முதல்முறையாக தலைமை செயலகத்திற்கு நுழையும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஏதாவது மோதலுக்கு வித்திடுவார்கள் என்று எண்ணிய போலீசாரின் எதிர்ப்பார்ப்பை தவிடு பொடியாக்கியது தினகரனின் பிரச்சனையற்ற பதவியேற்பு நிகழ்ச்சி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications