உட்கார சீட் கூட தரவில்லை போலீஸார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்
மதுரை: கையெழுத்துப் போன இடத்தில் தனக்கு உட்கார சீட் கூட போலீஸார் தரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோபத்துடன் கூறியுள்ளார்.
சென்னை கோர்ட்டின் முன்ஜாமீன் நிபந்தனைப்படி இன்று மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார் இளங்கோவன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது இளங்கோவன் கூறுகையில், கொலை மிரட்டல் தொடர்பாக ஒரு பொய் புகாரின் அடிப்படையில் என் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்துள்ளேன்.

ஹோட்டலில் தங்கி இருந்த என்னிடம் போலீஸ் அதிகாரி, அதிமுகவினர் உங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்போது செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். போலீசார் எனக்கு பாதுகாப்பு தரவில்லை. அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
போராட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினரை தடுத்து நிறுத்துவதை விடுத்து, என்னை தடுப்பதிலேயே போலீசார் குறியாக இருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. போலீசார் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் அதிமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு எனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்ற எனக்கு, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஒரு நாற்காலி கூட தரவில்லை. காலம் ஒரு நாள் மாறும். மதுரை போலீசாரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்தார் இளங்கோவன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications