செப். 15ல் முக்கிய பிரகடனம் வெளியிடப் போகிறேன்.. வைகோ
தமிழக மாநில வாழ்வாதரத்தை காப்பதற்கு சில முக்கிய முடிவுகளை தஞ்சையில் பிரகடனப்படுத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை: இயற்கை வளம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளோடு மோடி அரசு கைகோர்த்து செயல்படுகிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு வழக்கிற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தானே வழக்கில் ஆஜராகி வாதாடினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் விவகாரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஆதரவோடு ஓஎன்ஜிசி நிறுவனமும் , கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகருக்கு சொந்தமான ஜென் லெபாரெட்டிஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழக்கி தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளோடு மோடி அரசு கைகோர்த்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
நீதியரசர் நம்பியார் முன்னிலையில் இன்று வந்த இந்த வழக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக கூறினார் . உடனே நான் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராடுவதால் நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடும் எனக் கூறிய பின்பு , இந்த வழக்கை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .
நீதிமன்றம் சென்றால் இந்த வழக்கு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற காரணத்தால் மோடி அரசு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தை நிரந்தரமாக மூடி விட முயற்சிப்பதாக கூறினார் .
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழா மாநாடு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்குள் முடிவடைய இருக்கிறது.
இந்த மாநாட்டில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்கள் வழியில் தமிழக மாநில வாழ்வாதரத்தை காப்பதற்கு சில முக்கிய முடிவுகளை பிரகடனப்படுத்துவதாக மக்கள் தலைவர் வைகோ கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications