46 நர்ஸ் விடுதலை ஓ.கே.. 9 நீலகிரி நர்சுகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்..?

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் திக்ரித் நகரம் வந்தபோது, அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றிய 45 கேரள நர்சுகள் மற்றும் ஒரு தூத்துக்குடி நர்ஸ் ஆகிய 46 பேரும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர். அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கின் பாஸ்ரா உள்ளிட்ட பிற நகர மருத்துவமனைகளில் வேலை பார்க்கும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 நர்சுகளின் நிலைமை குறித்து அவர்கள் பெற்றோர் கவலை தெரிவிக்கிறார்கள். சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து இவர்கள் பணியாற்றும் இடம் பல நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளபோதிலும், பெற்றோருக்கு அச்சம் அகலவில்லை.
எந்த நேரத்திலும் அந்த நகரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினால் தங்களது மகள்கள் நிலை என்னவாகும் என்ற கவலையில் நீலகிரி மாவட்டத்து நர்சுகளின் குடும்பத்தார் உள்ளனர். பஸ்ரா நகரில் பணியாற்றும் அலீனா என்ற நர்ஸ் நேற்று தனது தாய் கிரேசி ஜோசுக்கு போன் செய்துள்ளார். அப்போது, தாங்கள் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்தியா திரும்ப தாங்கள் விரும்பியபோதிலும், ஈராக் அரசு அதிகாரிகள், இம்மாத இறுதியில்தான் தங்களை இந்தியா அனுப்ப சம்மதித்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் இம்மாத இறுதிவரை பயத்தோடு வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை அந்த நர்சுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியா தலையிட்டு உடனடியாக நீலகிரி நர்சுகளை தாயகம் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று நர்சுகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications