நீர் இல்லாமல் பயிர்கள் கருகி நாசம்… டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளதால் டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்: காவிரியில் இருந்து நீர் வராததாலும், மழை பொய்த்துள்ளதாலும் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் உடைந்த திருவாரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே முசிறியம் கிராமத்தில் வசித்து வருகிறார் சேகர். 50 வயதான இவர் ஒரு விவசாயி. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்திருந்தார். இந்நிலையில், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடாததாலும், மழை சரிவர பெய்யாததாலும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன.

இதனால், மனம் உடைந்து போன விவசாயி சேகர் பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் ராஜகுமாரன் என்ற விவசாயி விவசாய காப்பீட்டுத் தொகை கட்ட முடியாத கவலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில், திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டதால் 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications