நீர் இல்லாமல் பயிர்கள் கருகி நாசம்… டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியுள்ளதால் டெல்டா மாவட்டத்தில் மேலும் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர்: காவிரியில் இருந்து நீர் வராததாலும், மழை பொய்த்துள்ளதாலும் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் உடைந்த திருவாரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே முசிறியம் கிராமத்தில் வசித்து வருகிறார் சேகர். 50 வயதான இவர் ஒரு விவசாயி. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்திருந்தார். இந்நிலையில், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடாததாலும், மழை சரிவர பெய்யாததாலும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன.

இதனால், மனம் உடைந்து போன விவசாயி சேகர் பயிர்களுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் ராஜகுமாரன் என்ற விவசாயி விவசாய காப்பீட்டுத் தொகை கட்ட முடியாத கவலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில், திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டதால் 22 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications