தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குக - மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரகுநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விவசாயம் செய்த நெற்பயிர்கள் கருகியதால் மன வேதனை அடைந்த விவசாயி கோவிந்தராஜ், வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன், 37 மரணமடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 42. இவர், இரண்டரை ஏக்கர் குத்தகை நிலத்தில், 25 நாட்களுக்கு முன், நேரடி நெல் விதைப்பு செய்தார். இப்பகுதி குடமுருட்டி ஆற்றுப் பாசனப் பகுதியைச் சார்ந்தது. ஆற்றில் சரியாக தண்ணீர் வராததாலும், அப்பகுதியில் போதிய அளவுக்கு மழை பெய்யாததாலும், பயிர்கள் காய்ந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மரணமடைந்தார். விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு, ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார். மேலும் தண்ணீரின்றி பயிர் செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் சோதனைக்கு உள்ளாகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டார்.
காவிரி டெல்டா பகுதியை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவிடம், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரங்களை தமிழக அரசு மறைத்துவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விவசாய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் 25வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், விவசாய சீர் திருத்தங்களை நிறைவேற்றுவதில் 100 புள்ளிகளுக்கு 17.7 புள்ளிகள் மட்டுமே பெற்று தமிழகம் இந்தியாவில் 25 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications