தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குக - மு.க.ஸ்டாலின்
காவிரி டெல்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரகுநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விவசாயம் செய்த நெற்பயிர்கள் கருகியதால் மன வேதனை அடைந்த விவசாயி கோவிந்தராஜ், வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன், 37 மரணமடைந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 42. இவர், இரண்டரை ஏக்கர் குத்தகை நிலத்தில், 25 நாட்களுக்கு முன், நேரடி நெல் விதைப்பு செய்தார். இப்பகுதி குடமுருட்டி ஆற்றுப் பாசனப் பகுதியைச் சார்ந்தது. ஆற்றில் சரியாக தண்ணீர் வராததாலும், அப்பகுதியில் போதிய அளவுக்கு மழை பெய்யாததாலும், பயிர்கள் காய்ந்தன. இதனால் மனமுடைந்த விவசாயி மரணமடைந்தார். விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தமிழக அரசு, ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார். மேலும் தண்ணீரின்றி பயிர் செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் சோதனைக்கு உள்ளாகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டார்.
காவிரி டெல்டா பகுதியை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவிடம், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரங்களை தமிழக அரசு மறைத்துவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விவசாய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் 25வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், விவசாய சீர் திருத்தங்களை நிறைவேற்றுவதில் 100 புள்ளிகளுக்கு 17.7 புள்ளிகள் மட்டுமே பெற்று தமிழகம் இந்தியாவில் 25 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications