தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க குழு அமைப்பு... அமைச்சர் தகவல்!
சென்னை: முற்றிலும் தீக்கிரையான தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். தலைமை பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த தீ விபத்தில் கடையில் 7 தளங்களும் முற்றிலும் தீக்கிரையானது.
வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் கட்டடத்தின் பல பகுதிகள் திடீர் திடீரென இடிந்து விழுகிறது. கடையில் எதையும் மிச்சம் வைக்கமால் அக்னி பிழம்புகள் சாம்பலாக்கியுள்ளன.

உறுதியை இழந்த கட்டடம்
24 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பிழம்புக்குள் சிக்கியதால் கட்டடம் தனது உறுதி தன்மையை இழந்துள்ளதாக தெரிகிறது. அதனாலேயே கட்டடம் தாக்குபிடிக்க முடியாமல் சரிந்து விழுகிறது.

கட்டடத்தை விட்டுவைப்பது ஆபத்து
தீயை அணைத்தாலும் ஸ்திரத் தன்மையை இழந்த கட்டடத்தை விட்டு வைப்பது ஆபத்து என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் இன்று சென்னை சில்க்ஸ் பகுதியில் ஆய்வு செய்தார்.

இடிக்க ஐவர் குழு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீ விபத்தால் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்படும் என தெரிவித்தார். கட்டடத்தை இடிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் 5 பொறியாளர்கள் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டடங்களுக்கு பாதிப்பு வராமல்..
சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கட்டடம் இடிக்கப்படும் என்றும் அவர் கூறினார். எந்த தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடம் இடிக்கப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் ஆர்பி உதயக்குமார் கூறினார்.

அரசு சார்பில் இடிப்பு
தமிழக அரசின் சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என்றும் அவ்ர கூறினார். வெடிப்பொருட்கள் வைத்து கட்டம் இடிக்கப்படாது என்றும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார். ஆய்வுப் பணிகள் முடிந்த பின்பு கட்டம் இடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications