பெட்ரோல், டீசல் விலை விர்.. காய்கறிகள் விலை சர்.. கடும் அவதியை நோக்கி மக்கள்!
சென்னை: டீசல் மற்றும் பெட்ரோலின் தொடர் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏற ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியபோதே, இது விலையேற்றத்தை ரகசியமாக ஊக்குவிக்கும் நடவடிக்கைதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது சாதாரண நிகழ்வுபோல காண்பிக்க தினசரி விலையேற்ற நடவடிக்ககை உதவும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

விலையேற்றம் தொடர்கதை
எதிர்க்கட்சிகள் கூறியதை போலத்தான் இப்போது நிலைமை அரங்கேறியுள்ளது. யாருமே உணராத வகையில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே வந்தது. கடந்த 3 மாதங்களில் தலைநகர் டெல்லியில் லிட்டருக்கு 7 ரூபாய் விலை உயர்வை சந்தித்துள்ளது பெட்ரோல். ஜூலை 1ம் தேதி லிட்டருக்கு ரூ.63.09 என்று இருந்த விலை இப்போது லிட்டருக்கு ரூ.70.38ஐ தொட்டது.

காய்கறிகள் விலை
பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்பது, காய்கறிகள் விலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து செலவும் காய்கறி மீதே சுமத்தப்படும் என்பதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

பண வீக்க விகிதம்
காய்கறிகள் மீதான பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 44.91 சதவீதத்தை தொட்டது. அது ஜூலையில் 21.95 என்ற அளவில் இருந்தது. உணவு பொருட்கள் மீதான பணவீக்க விகிதம், ஜூலையில் 2.16சதவீதமாகவும், ஆகஸ்டில் 5.75 சதவீதமாகவும் உயர்ந்தது.

எரிபொருள்
உற்பத்தி பொருட்கள் மீதான பண வீக்கம் ஜூலையில் 2.18 சதவீதமாகவும், ஆகஸ்டில் 2.45 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் மீதான பண வீக்கம் ஜூலையில் 4.37 சதவீதமாகவும், ஆகஸ்டில் 9.99 சதவீதமாகவும் இருந்தது.

வெங்காயம் காஸ்ட்லி
மொத்த விலையேற்ற குறியீட்டு எண் என்பது 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது. ஜூலையில் அக்குறியீடு 1.88 சதவீதமாக இருந்தது. கடந்த மாதம் அது 4.41 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. காய்கறிகளில் வெங்காயத்தின் விலையேற்றம் அதிகபட்சமாக, அதாவது 88.46 சதவீதம் என்ற அளவிலும், உருளைக்கிழங்கின் விலையேற்றம் 43.8 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications