டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ச்சியாக 4 குழந்தைகள் பலி – திருப்பூரில் சோகம்
திருப்பூர்: திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 23 ஆவது வார்டு பகுதியிலுள்ள சூர்யா காலனியைச் சேர்ந்த மனோகரன். இவருடைய மகள் சுபலட்சுமி, கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த மயில்சாமியின் மகள் பிருந்தா ஆகியோர் டெங்குக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அதே வார்டுக்கு உள்பட்ட ஆர்.கே.ஜி. நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மகன் சுரேஷ் என்ற சிறுவனும் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலால் தொடர் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த 23ஆவது வார்டு பொதுமக்கள், கடந்த 29 ஆம் தேதி கருமாரம்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுகாதாரத்துறை மூலமாக அப்பகுதியில் உடனடியாக மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 50 ஆவது வார்டுக்கு உள்பட்ட வெள்ளியங்காடு, ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்த செந்தில்,கெளசல்யா தம்பதியின் மகள் தனலட்சுமி கடந்த 3 நாள்களாக டெங்குக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி உயர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அச்சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். டெங்கு தாக்குதலால் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் நகரில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications