காங். தலைவராக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரா? ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் பொறுப்பேற்பார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்ததற்கு மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ப.சிதம்பரம், சோனியாவும் ராகுலும் மக்களிடம் வெளிப்படையாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேச வேண்டும். சோனியா காந்தி நல்ல தலைவர்தான். எதிர்காலத்தில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் இக்கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வரும் ஜி.கே.வாசன் வெளிப்படையாக சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டருக்குமே நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது என்று கூறியுள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications