மயிலாடுதுறையே அசந்து போச்சு.. ஒரே பெண்ணை 3 முறை கல்யாணம் செய்து.. அசரடித்த மாப்பிள்ளை
ஒரே பெண்ணை 3 முறை திருமணம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்
மயிலாடுதுறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர். மும்மத முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மாயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர்.. இறுதியில், திருவையாறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை பேசி முடித்தனர்.. இவருக்கு 26 வயதாகிறது.

3 முறை திருமணம்
புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துள்ளார்.. எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்துள்ளது.. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு.. அவர்களின் மதங்கள் புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது..

சம்மதம்
எனவே, தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும்என்று ஆசைப்பட்டார்.. இந்த விருப்பத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொன்னார்.. அவர்களும் புருஷோத்தமனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.. இதை பெண் வீட்டு தரப்பிலும் தெரிவிக்கவும், அவர்களும் ஓகே சொன்னார்கள்.. இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ முறைப்படி மற்றும் இஸ்லாமிய முறைப்படி, 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அழைப்பிதழ்கள்
இந்த 3 திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன்.. குறித்த தேதியில், அதாவது மார்ச் 26-ம் தேதி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படியும், நேற்றைய தினம் 27-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன்..

மணமேடை
இஸ்லாமிய முறைப்படியான ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.. பிறகு, கிறிஸ்தவ முறைப்படி ஆடை, அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்தவ போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது... நேற்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..

திருமணம்
உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டார பகுதியினர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர். இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை புருஷோத்தமன் சொல்லும்போது, " எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... மதநல்லிணக்கம் ஏற்படுத்தவும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தவே இப்படி ஒரு திருமணத்தை நடத்தினேன்" என்று பூரித்து சொல்கிறார்..!
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications