டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இந்த சம்பள உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தங்கமணி பேசுகையில், டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள உயர்விற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் தங்கமணி பேசியபோது டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அறிவித்தார். அப்போது அவர், தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். மேற்பார்வையாளர்களுக்கு ரூ.500, விற்பனையாளர்களுக்கு ரூ.400 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.300 என்ற அளவில் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறினார்.
இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் மாதத்தில் இருந்து அமலாகும். இதன்மூலம் 26634 ஊழியர்கள் பயனடைவார்கள். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனந்திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications