38 பேரை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால்... சிபிஎஸ்இ இயக்குநருக்கு.. ஐகோர்ட் எச்சரிக்கை
தாமதமாக நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக 38 பேர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது,
இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அந்தத் தேர்வினை எழுத இணையதளத்தின் மூலம் அனைவரும் விண்ணப்பித்தனர். கடந்த மார்ச் 1-ம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான கால கெடு முடிந்தது.

கூடுதல் அவகாசம்
எனினும், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை கூடுதலாக ஐந்து நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

வழக்கு
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 38 பேர் இணையதளத்தின் மூலம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், தங்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

விசாரணை
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிடில் சிபிஎஸ்இ இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி புஷ்பா எச்சரித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications