38 பேரை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால்... சிபிஎஸ்இ இயக்குநருக்கு.. ஐகோர்ட் எச்சரிக்கை
தாமதமாக நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக 38 பேர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது,
இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, அந்தத் தேர்வினை எழுத இணையதளத்தின் மூலம் அனைவரும் விண்ணப்பித்தனர். கடந்த மார்ச் 1-ம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான கால கெடு முடிந்தது.

கூடுதல் அவகாசம்
எனினும், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை கூடுதலாக ஐந்து நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டனர். அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

வழக்கு
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 38 பேர் இணையதளத்தின் மூலம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், தங்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

விசாரணை
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்த 38 பேரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிடில் சிபிஎஸ்இ இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி புஷ்பா எச்சரித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications