எப்டியாவது பொங்கலுக்கு ஊருக்கு போய்டணும்... ரயில்களில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டி வெளியூர் செல்லும் மக்களின் கூட்டத்தால் சென்னை ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாட நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனால் பஸ் மற்றும் ரயில்களின் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. குறிப்பாக சென் னையில் இருந்து கோவை மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல் லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பின.
இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல 22 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளும் அறிவிக்கப் பட்டன.

ரயில் தான் பெஸ்ட்...
ஆனால், கழிப்பறை வசதி மற்றும் அவ்வப்போது டீ, காபி, டிபன் உள்ளிட்ட சாப்பாடு வசதி உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்களின் முதல்தேர்வு ரயில் பயணமாகத் தான் இருக்கிறது.

அலைமோதிய கூட்டம்...
அந்தவகையில், ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பாதுகாப்பு பணி...
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து அமைதியான முறையில் இடவசதி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

நீண்ட வரிசை...
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிப்பதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் இடம் பிடித்துக் காத்திருந்தனர். ஆனால், களைப்பை விட எப்படியும் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டும் என்ற ஆர்வம் அங்கிருந்த அனைத்து மக்களின் முகங்களிலும் பிரதிபலித்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications