வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சென்னையில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் அதிகாலை முதலே வெளுத்து கட்டும் மழையால் அண்ணா சாலை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே முகப்பேர், அண்ணா நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விடுமுறை இல்லை என்றும் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை, நந்தனம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகனஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications