Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு

சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

நாளையே முடிவு

நாளையே முடிவு

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தேவை என்ன - உத்தரவு?

தேவை என்ன - உத்தரவு?

சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தேவை என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கலாம்

பரிந்துரைக்கலாம்

காயம் அடைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடவடிக்கை?

என்ன நடவடிக்கை?

மேலும் தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தூத்துக்குடியில் அமைதி திரும்பவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியது.

6 வாரத்துக்கு ஒத்திவைப்பு

6 வாரத்துக்கு ஒத்திவைப்பு

மேலும் சட்ட உதவி மையம் எடுத்த நடவடிக்கைகளை ஜூன் 6 ஆம் தேதி அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து 6 வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் குமார் அமர்வு ஒத்திவைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+