சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

நாளையே முடிவு
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தேவை என்ன - உத்தரவு?
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தேவை என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கலாம்
காயம் அடைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடவடிக்கை?
மேலும் தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தூத்துக்குடியில் அமைதி திரும்பவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியது.

6 வாரத்துக்கு ஒத்திவைப்பு
மேலும் சட்ட உதவி மையம் எடுத்த நடவடிக்கைகளை ஜூன் 6 ஆம் தேதி அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து 6 வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் குமார் அமர்வு ஒத்திவைத்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications