பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 30-இல் உண்ணாவிரதப் போராட்டம்
கொங்கு மாவட்டங்களின் நீராதாரமான பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பகுதிகளில் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்தில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதன்படி தேக்கோட்டை பகுதியில் ஏற்கனவே 150 அடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்கட்டி பகுதிகளில் தடுப்பணையை அந்த மாநில அரசு கட்டி வருகிறது.

பவானி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. பவானி சாகர் அணை மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயிகள், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமாக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 21 அரசியல் கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. எனினும் அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல் ஏப்ரல் 4-ஆம் தேதி ஈரோட்டில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெறவுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications