பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 30-இல் உண்ணாவிரதப் போராட்டம்
கொங்கு மாவட்டங்களின் நீராதாரமான பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பகுதிகளில் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்தில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதன்படி தேக்கோட்டை பகுதியில் ஏற்கனவே 150 அடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்கட்டி பகுதிகளில் தடுப்பணையை அந்த மாநில அரசு கட்டி வருகிறது.

பவானி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. பவானி சாகர் அணை மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயிகள், மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமாக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 21 அரசியல் கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. எனினும் அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல் ஏப்ரல் 4-ஆம் தேதி ஈரோட்டில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெறவுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications