நான்தான் ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தேன்.. எம்எல்ஏக்களுக்காக வரிந்துகட்டும் தினகரன்!
பெரும்பான்மையில்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் நான்தான் மனு அளித்தேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரும்பான்மையில்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் நான்தான் மனு அளித்தேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் மனு அளித்தனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரன் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். கடந்த 3 நாட்களாக கூட்டத்தில் பங்கேற்கும் தினகரன் பேச அனுமதி மறுக்கப்படுவதாக இடையிலேயே வெளிநடப்பு செய்து வருகிறார்.
இன்றும் சட்டசபையில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார்.

தினகரனிடம் கேள்வி
அப்போது சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவரிடம் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆட்சியை கலைக்க கோரினேன்
அதற்கு பதிலளித்த தினகரன் 18 எம்எல்ஏக்களும் முதல்வரை மாற்றவேண்டும் என்றுதான் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர் என்றார். மேலும் தான்தான் பெரும்பான்மை இல்லாத ஆட்சியை கலைக்கக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தேன் என்றும் தினகரன் ஒப்புதல் தெரிவித்தார்.

அரசு காலண்டரில்
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார். அரசு காலண்டரில் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

போட்டியிட தயார்
பெயருக்குதான் ஜெயலலிதா அரசு என்கிறார்கள் என்ற தினகரன், மத்திய அரசுடன் சுமூகமாக இருப்பது வேறு என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட தயார் என்றும் தினகரன் தெரிவித்தார்.

மழுப்பிய தினகரன்
கட்சி தொடங்குவீர்களா அல்லது சுயேச்சையாய் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன் பொறுத்திருங்கள் என மழுப்பினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications