சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: 100 கேள்விகளுடன் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ விசாரணை!!
சென்னை: சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பகம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையின் போது தயாநிதி மாறனிடம் 100 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுவிடுவதில் சி.பி.ஐ. அதிகாரிகள் முனைப்பாக இருந்தனர்.
2004ஆம் ஆண்டு ஜூன் முதல் 2007ஆம் ஆண்டு ஜூன் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது சில பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுடன் சேர்ந்து அவர் அதிக திறன் வாய்ந்த தொலைபேசி இணைப்புகளை தனது சென்னை, போட் கிளப் இல்லத்தில் இருந்து தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டிவி அலுவலகத்துக்கு இடையே பூமிக்கு அடியில் கேபிள்கள் அமைத்து இணைத்திருந்தார்.

இதன் மூலம் 300-க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளை அவர் விதிகளை மீறிப் பெற்றிருந்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், துணைப் பொது மேலாளராக இருந்த எம்.பி.வேலுச்சாமி ஆகியோர் மீது சி.பி.ஐ. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தயாநிதி மாறனை ஜூலை 1-ந் தேதியன்று ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையின் போது தாம் கைது செய்யப்படக் கூடும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கோரியிருந்தார்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவருக்கு 6 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இதன் பின்னர் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி பிணைத் தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் இன்று விசாரணைக்காக தயாநிதி மாறன் ஆஜரானார். அவரிடம் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் தொடர்பாக துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயாரித்திருந்தனர். இன்றைய ஒரே நாளில் இத்தனை கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்காவிட்டால் அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து தயாநிதியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் தயாநிதி மாறனின் உதவியாளர்கள் விசாரணையின் போது தெரிவித்த தகவல்களை முன்வைத்தும் தயாநிதி மாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் எப்படி தயாநிதி மாறன் வீட்டில் அமைக்கப்பட்டது என்பதை இந்த விசாரணையில் அறிய இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications