For Daily Alerts
Just In
தனுஷ்கோடியில் பயங்கர சூறைக்காற்று.. கடலில் குளிக்கத் தடை..!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது.
இதனால் பல பகுதிகளிலும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருகிறது. இதனிடையே தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
In the Dhanushkodi coast, there is a severe hurricane wind. It is forbidden that no tourists should bathe in the sea
Story first published: Friday, May 5, 2017, 11:10 [IST]