திருப்பூர் சாயப்பட்டறைகள் தில்லுமுல்லு... சீல் வைத்த அதிகாரிகள்: வீடியோ
நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைகள் கழிவுநீரைக் கலந்ததால் அதிகாரிகள் அப்பட்டறைகளுக்கு சீல் வைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரையும் கலந்துவிட்ட சாயப்படறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
திருப்பூரில் பல்வேறு சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வரும் கழிவு நீர் நொய்யல் ஆற்றை முற்றிலும் மாசுபடுத்தியதால் அங்கு விவசாயம் அழிந்துகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுளளது.

இந்நிலையில், திருப்பூரில் கடந்த வாரம் பெய்த கனமழையின் போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது 22 சாயப்பட்டறைகள் தங்கள் பட்டறைக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்துவிட்டன.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கழிவுகளை ஆற்றில் விட்டது குறித்து ஆய்வு செய்து, 22 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து மூடினர்.












Click it and Unblock the Notifications