இந்திரா காந்தி இருந்திருந்தால் தனி தமிழீழ நாடு விஸ்வரூப பாய்ச்சலை காட்டியிருக்கும்!
இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளில் தமிழீழம் அமைய அவர் உதவியதை நினைவூட்டும் பதிவு.
சென்னை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இருந்திருந்தால் வங்கதேச தனிநாடு உருவானதைப் போல தனித் தமிழீழ தேசமும் உருவாக்கப்பட்டு இந்நேரம் அது தமது பாய்ச்சலை காட்டியிருக்கும் என்பது ஈழத் தமிழர்களின் ஆதங்கம்.
1983-ல் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட போது இந்தியாவே கொந்தளித்தது. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சிங்கள அதிபர் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
அப்போது தமிழகத்தில் ஈழத் தமிழர் விடுதலை அமைப்புகள் ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன. 1983 இனப் படுகொலை சம்பவங்களுக்குப் பின்னர் இந்த பயிற்சி முகாம்களை மத்திய அரசே கையிலெடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

ஜெயவர்த்தனேவுக்கு எச்சரிக்கை
அத்துடன் இலங்கையின் திருகோணமலை பகுதியில் அமெரிக்கா காலூன்ற ஜெயவர்த்தனா அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் இந்திரா காந்தி அம்மையாரோ, நாடாளுமன்றத்திலேயே இலங்கையை பகிரங்கமாக எச்சரித்தார். இந்தியாவின் அனுமதியின்றி இலங்கையில் எந்த் ஒரு வெளிநாட்டையும் அனுமதிக்க கூடாது என கடுமை காட்டினார்.

பேச்சுவார்த்தை
இந்திரா காந்தியைப் பொறுத்தவரை தமிழீழப் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து இலங்கை அரசுக்கு நெருக்கடி தருவது; அதேநேரத்தில் தமிழீழ விடுதலை குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்கிற இரு யுக்திகளை கடைபிடித்தார்.

தமிழீழம் மலரும்
இதனால் வங்கதேசத்தைப் போல நிச்சயம் தமிழீழம் மலரும் என்கிற நம்பிக்கை ஈழத் தமிழருக்கு இருந்தது. ஈழத் தமிழர்களின் உரிமைகள் மீதான கரிசனத்துடன் இந்தியாவின் பாதுகாப்புக்கும் தமிழீழம் அரணாக இருக்கும் என்பதுதான் இந்திரா காந்தி அம்மையாரின் திடமான நம்பிக்கையாக இருந்தது.

இந்திரா படுகொலை
திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு தமிழீழ தேசத்தை இந்திரா காந்தி உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தார் என்பது வெளிப்படையாகவே இருந்தது. ஆனால் இந்திராவின் வியூகங்களும் நடவடிக்கைகளும் விறுவிறுவென வேகம் காட்டிய சூழலில்தான் 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஆட்டுவிக்கும் பொம்மையான பிரதமர்
இந்திரா காந்தி இருந்திருந்தால் இந்த நேரம் தமிழீழ தனிநாடு தம்முடைய விஸ்வரூப பாய்ச்சலைக் காட்டியிருக்கும் என்பதுதான் யதார்த்தம். இந்திரா காந்தி அம்மையாரின் படுகொலைக்குப் பின்னர் இந்திய அரசின் போக்கே திசைமாறிப் போனது. இந்திரா காந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை தேசத்தின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் நபராக பிரதமரே இருந்தார். ஆனால் இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காலத்தில் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் சக்திகளாக அதிகாரிகள் உருவெடுத்தனர். அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மையாக பிரதமர் உருமாறிப் போனார். இதனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன. இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாளை தமிழீழத் தமிழர்கள் ஏக்கப் பெருமூச்சுடன் விடுதலை கனவை சுமந்தபடியே கடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications