6 மாவட்டங்களில் கேஸ் மானிய திட்டம்: ஆதார் எண் முக்கியமா?
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில் கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால் பலருக்கு இதுவரை ஆதார் எண் தெரியாததால் அவர்கள் திண்டாடி வருகின்றனர்.
சமையல் எரிவாயுக்கான மானிய தொகையை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 184 மாவட்டங்களில் 100 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியம் பெற ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டதால் தமிழகம் முழுவதும் ஆதார் அட்டை பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் பல மாவட்டங்களில் அதற்கான பணிகள் கூட நடக்கவில்லை. இன்னும் சில மாவட்டங்களில் அதற்கான பணிகள் பாதியளவு தான் நடந்துள்ளது. பல மாவட்டங்களில் புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் எண் கிடைக்கவில்லை. இதனால் கேஸ் மானியம் பெற ஆதார் எண் அவசியமா என்று உச்ச நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மானியம் பெற ஆதார் எண் அவசியம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆதார் அட்டை பெற மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இந்த காலத்திற்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் அந்த கேஸ் இணைப்புக்கு மானியம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications