சசி குடும்பத்தில் எல்லோரும் சிக்குகிறார்கள்.. வலுவான ஆவணங்களை தேடுவதில் ஐடி அதிகாரிகள் மும்முரம்!
போலி நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தில் மிதந்த சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரும் சிக்குகிறார்கள் என்கிறது ஐடி வட்டாரங்கள்.
சென்னை: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய வருமான வரித்துறை சோதனையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சிக்குகிறார்கள்... இந்த வழக்கை வலுவாக்குவதற்கான ஆவனங்களைத் தேடுவதில் வருமான வரி அதிகாரிகள் படு மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்தினரை குறித்து நாடு முழுவதும் 190 இடங்களில் ஒரே நேரத்தில் 2,000 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் தரப்பு திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.

அது பணம் பதுக்கல்
இது தொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தமிழகத்தில் இதற்கு முன்னர் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கும் இதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. முந்தைய ரெய்டுகள் ரூபாய் நோட்டுகள் பதுக்கல் போன்ற விவகாரங்களுடன் தொடர்புடையது.

ஆபரேஷன் க்ளீன் பிளாக் மணி
ஆனால் சசிகலா குடும்பத்தின் மீதான வருமான வரித்துறை சோதனை என்பது முழுமையாக கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைதான். அதாவது போலி நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீதான ஆபரேஷன் கிளீன் ப்ளாக் மணி ஆபரேஷனின் நடவடிக்கையின் ஒரு பகுதிதான்.

விசாரணை நடத்தினோம்
முந்தைய வருமான வரி சோதனைகளில் விசாரணைகள் நடத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தோம். திரும்ப திரும்ப விசாரணை நடத்தியிருந்தோம். ஆனால் இப்போது எது எது டுபாக்கூர் நிறுவனங்கள்? யாரெல்லாம் இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள்? இந்த நிறுவனங்களின் நெட்வொர்க் என்கிற அத்தனை விவரங்களையும் கையில் வைத்துக் கொண்டு களமிறங்கியிருக்கிறோம்.

வழக்கை வலுவாக்க...
எங்கள் வசம் உள்ள ஆவணங்களை உறுதிப்படுத்துகிற கூடுதல் ஆவணங்கள்தான் இப்போது தேவை. அதாவது நாங்கள் போடப் போகும் வழக்குகளில் இருந்து இவர்கள் எளிதாக தப்பிவிடக் கூடாது என்பதற்கான வழக்கை வலிமையாக்குகிற ஆவணங்களைத்தான் தேடுகிறோம். அதனால் கருப்புப் பணத்தில் மிதந்த சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரும் வசமாக சிக்கிவிட்டனர். இவர்கள் தப்பவே முடியாது என்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications