திருமணத்திற்கு மனைவிக்கு போட்ட நகையை பற்றி ஐடியில கேட்டாங்க- விவேக்
வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை, விசாரணை பற்றி ஜெயாடிவியின் சிஇஓ விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: என் மனைவியின் திருமணத்திற்கு போட்ட நகைகள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர், நான் விளக்கம் அளித்து விட்டு வந்திருக்கிறேன் என்று ஜெயாடிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
ஜெயாடிவி அலுவலகத்திலும், சிஇஒ விவேக் ஜெயராமன் வீட்டிலும் 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேற்று 5 மணிநேரம் விவேக்கிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த சோதனை குறித்தும், வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை பற்றியும் விவேக் இன்று தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஜாஸ் சினிமாஸ், ஜெயாடிவியை நான் நிர்வாகம் செய்து வருகிறேன். வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீடு, ஜெயாடிவி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
எனது வீட்டில் திருமணத்திற்குப் பின்னர் மனைவிக்கு போட்ட நகைகளைப் பற்றி விசாரித்தனர். அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள் அப்போது போய் ஆவணங்களை அளிப்பேன். எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும் நான் போய் விளக்கம் அளிப்பேன்.
முறைகேடாக பணம் சம்பாதித்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அது நானாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று கூறினார் விவேக்.
வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையை செய்துள்ளனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்திருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள். நான் செல்வேன்.
மழையில் 5 நாட்களாக மழை என்றும் பாராமல் காத்துக்கிடந்த செய்தியாளர்கள், நண்பர்களுக்கு நன்றி என்றும் கூறினார் விவேக் ஜெயராமன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications