தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் மாபெரும் ரெய்டு
தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை மட்டும் குறி வைத்து மாபெரும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்பது பொதுவான ஒன்றுதான். சர்ச்சைக்குரிய நிறுவனத்தில் ரெய்டுக்கு போனால் அதிகபட்சம் 10,20 இடங்களில் நடைபெறும்.

ஆனால் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரையும் குறிவைத்து நாடு முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இப்படியான மாபெரும் ஐடி நடவடிக்கை என்பது இதுதான் முதல் முறையாகும். சசிகலா குடும்பத்தின் போலி நிறுவனங்கள், வெளியே வராத பண்ணை வீடுகள் என அனைத்துமே இப்போது ரெய்டின் பிடியில் சிக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications