ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியவில்லை.. டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளதையடுத்து தமிழக அரசு சரியாக இந்தப் பிரச்சனையை கையாளவில்லை என்று டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று திமுக செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் பண்டிகையான பொங்கல் பண்டிகையில் போது தென் மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக்கு தடைவிதிக்கப்பட்டதையடுத்து, தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டல்ல என்றும், ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து, திமுக செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தை முறையாக சரியாக கையாளவில்லை. அதே போன்று நீதிபதிகளுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. காரணம் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு காளைகளை எந்த அளவிற்கு பேணிப் பாதுகாத்து வருகிறார்கள் என்தெல்லாம் நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. அல்லது இதனை எல்லாம் முறையாக தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.
எனவே, உரிய சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். பாரம்பரியமான விளையாட்டு, ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொடுக்கப்படுகின்ற போஷாக்கு, மற்ற மாடுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதை என்பதை எல்லாம் தமிழக அரசு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications