காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வழித்தடம் தேவை: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வழித்தடம் தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். சுமார் 1000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை வேறு மாநிலத்துக்கு விற்க தமிழகம் தயாராக உள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் காற்றாலை மூலம் 7 ஆயிரத்து 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரச திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்திக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், ஆயிரம் மெகாவாட் உபரி மின்சாரத்தை வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழகம் விரும்புகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு இடையே பசுமை வழித்தடம் அமைக்க வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications