234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்.. காமராஜர் சாதனையை சமன் செய்வாரா ஜெயலலிதா?
சென்னை: தமிழகத்தில், 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் 234 தொகுதிகளையும் சந்திக்கப்போகும் கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்டுள்ள அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அதன்பிறகு அதிமுக தற்போது உதிரி கட்சிகளை தனது சின்னமான இரட்டை இலையில் போட்டியிட செய்து, தேர்தலை சந்திக்கிறது.
இதன் மூலம், 234 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது அதிமுக. கட்சி மிகவும் பலமாக உள்ளதாக ஜெயலலிதா கருதுவதே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை
கடந்த லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு, 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தைரியம் தற்போது கூடுதலாகியுள்ளது. ஜெயலலிதாவின் துணிச்சலை அதிகரிக்கும் வகையில், தற்போது, தமிழகத்தில் ஐந்து முனை போட்டிஏற்பட்டுள்ளது. அதனால், அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி, சாதகமான சூழல் ஏற்படும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

காமராஜர் காலம்
1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 206 தொகுதிகளில், 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது. 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 46 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வெற்றி பெற்றது.

கூட்டணி கலாசாரம்
அதன்பின், நடந்த எல்லா சட்டசபை தேர்தல்களிலும் ஏதாவது ஒன்று அல்லது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுத்தான், திமுக மற்றும் அதிமுகவின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இரட்டை இலை
எனவேதான், தமிழகத்தில் வேறு எந்த கட்சியும், செய்யாத சாதனையாக, தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் முடிவில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக தெரிகிறது. லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளை அதிமுக பெற்றுள்ளதால் ஜெயலலிதா இம்முறை 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளாராம்.

காமராஜர் சாதனை
அதிமுக இத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்த கட்சி என்ற பெருமை ஜெயலலிதா தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு வந்து சேரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications