234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்.. காமராஜர் சாதனையை சமன் செய்வாரா ஜெயலலிதா?
சென்னை: தமிழகத்தில், 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளதன் மூலம், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் 234 தொகுதிகளையும் சந்திக்கப்போகும் கட்சி என்ற பெருமை ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக கொண்டுள்ள அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அதன்பிறகு அதிமுக தற்போது உதிரி கட்சிகளை தனது சின்னமான இரட்டை இலையில் போட்டியிட செய்து, தேர்தலை சந்திக்கிறது.
இதன் மூலம், 234 தொகுதிகளிலும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளது அதிமுக. கட்சி மிகவும் பலமாக உள்ளதாக ஜெயலலிதா கருதுவதே இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தன்னம்பிக்கை
கடந்த லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு, 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த தைரியம் தற்போது கூடுதலாகியுள்ளது. ஜெயலலிதாவின் துணிச்சலை அதிகரிக்கும் வகையில், தற்போது, தமிழகத்தில் ஐந்து முனை போட்டிஏற்பட்டுள்ளது. அதனால், அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி, சாதகமான சூழல் ஏற்படும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

காமராஜர் காலம்
1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 206 தொகுதிகளில், 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது. 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 46 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வெற்றி பெற்றது.

கூட்டணி கலாசாரம்
அதன்பின், நடந்த எல்லா சட்டசபை தேர்தல்களிலும் ஏதாவது ஒன்று அல்லது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுத்தான், திமுக மற்றும் அதிமுகவின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இரட்டை இலை
எனவேதான், தமிழகத்தில் வேறு எந்த கட்சியும், செய்யாத சாதனையாக, தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் முடிவில் ஜெயலலிதா இறங்கியுள்ளதாக தெரிகிறது. லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளை அதிமுக பெற்றுள்ளதால் ஜெயலலிதா இம்முறை 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளாராம்.

காமராஜர் சாதனை
அதிமுக இத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், காமராஜருக்கு பிறகு ஒரே சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்த கட்சி என்ற பெருமை ஜெயலலிதா தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு வந்து சேரும்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications