பெற்றோர்களிடம் பாலியல் புகார்... மாணவிகளை மிரட்ட முயற்சித்த எஸ்விஎஸ் கல்லூரி... ஷாக் தகவல்
விழுப்புரம்: பிரச்சினையில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில் மாணவிகளை மிரட்ட, அவர்களது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் போன் செய்து சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது பாலியல் புகார் கூறியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் இயங்கி வருகிறது எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி. இந்த கல்லூரிக்கு எதிரே தனியார் நிலத்தில் உள்ள தரைக் கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாணவிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அவர்கள் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகளான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் வ.உ.சி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா, சென்னை எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அக்கல்லூரியின் தாளாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அக்கல்லூரி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்றவற்றிற்கு உரிய ரசீதுகள் கொடுக்கப்படவில்லை. நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பாக எதிர்த்துக் கேட்ட மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கடுமையாக மிரட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து, ‘உங்கள் மகளுக்கு தவறான பழக்க வழக்கங்கள் உள்ளன. ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறார். பாலியல் ரீதியாக அவளுடைய நடவடிக்கை சரியில்லை' என அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளன.
நடத்தை குறித்து இப்படிப்பட்ட புகார்களைக் கூறினால் தான் சம்பந்தப்பட்ட மாணவிகள் பயப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் நினைத்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு பயந்து நடந்து கொண்டோம் என அக்கல்லூரி மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலை தற்கொலை செய்து கொண்ட மாணவிகளும் தங்களது கடிதத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், ‘நாங்கள் தற்கொலை செய்ததற்கு கேரக்டர் சரியில்லாததுதான் காரணம் என கல்லூரி நிர்வாகத்தில் இருந்து சொல்வார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்' என அம்மாணவிகள் தங்களது கடைசிக் கடிதத்தில் எழுதியுள்ளது நினைவு கூரத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications