சாதி மறுப்பு திருமணங்களுக்கு தடை ஏற்படுத்தும் சுற்றறிக்கை... அரசுக்கு கனிமொழி கேள்வி!
திருமண பதிவிற்கு பெற்றோரின் அடையாள அட்டைகளும் அவசியம் என்ற அரசு சுற்றறிக்கைக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருமண பதிவிற்கு பெற்றோரின் அடையாள அட்டைகளும் அவசியம் என்று அரசு கொடுத்திருக்கும் சுற்றறிக்கை சாதி மறுப்பு திருமணங்களுக்கு பெருமளவில் தடையை ஏற்படுத்தும் என்று திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமணப் பதிவை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பதிவுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் மற்றும் சாட்சிகளின் ஆவணங்களோடு இனி பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து கொள்வோருக்கு இதில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்வோர் எப்படி அவர்களின் சான்றிதழ்களைக் கொண்டு வர முடியும் என்பது தான் கேள்வி.
இந்நிலையில் அரசின் இந்த சுற்றறிக்கைக்கு திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். முகநூலில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், தமிழ்நாட்டில் இனி காதலிப்பர்வள் தங்களின் பெற்றோரின் அனுமதியுடன் தான் காதலிக்க வேண்டும்.

புரட்சித் திருமணங்கள் தடுக்கப்படும்
பெற்றோர் ஒப்புதல் இன்றி இனி தன் வாழ்க்கை துணையை யாரும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனால் சாதி மறுப்பு, மதமற்ற, ஏற்ற தாழ்வுகள் அற்ற புரட்சி திருமணங்கள் எல்லாம் பெருமளவில் தடுக்கப்படும்.

பதிவுத்துறை சுற்றறிக்கை
செப்டம்பர் 25,2017ல் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் ஒரு தன்னக சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இனி திருமண பதிவுகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணின் அடையாள சான்றிதழ்கள் மட்டும் அளித்தால் போதாது.

பெற்றோர் சான்றிதழை எப்படி தர முடியும்
திருமணம் செய்துகொள்வோரின் பெற்றோர்கிளின் அடையாள சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் இருவர் எப்படி பெற்றோர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை போன்ற அத்தாட்சிகளை தர முடியும்.

மறைமுக கணை
இந்த அறிக்கை மறைமுகமாக சாதி மறுப்பை, மத மறுப்பை எதிர்ப்பதற்கான ஒரு மறைமுக கணையாகத் தான் தெரிகிறது. நாம் மெதுவாக மதவாதிகளின், சாதியவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறோமா?

அரசியல் சட்டத்திற்கு எதிரானது
பல நூற்றாண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுகிறோமா? தன் பெயரில் திராவிடத்தைத் தாங்கும் ஆளம் கட்சி இதை ஏன் தடுக்கவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கை இது என்றும் கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications