நான் நன்றாகத்தானே இருக்கிறேன்.. எதற்கு எனக்கு முன் சங்கு? சிஎம் கான்வாயை புறக்கணித்த கர்ம வீரர்!
நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர்.
சென்னை: நேர்மையின் அடையாளமாய் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையின் சிகரமாய் வாழ்ந்தார்.
தமிழ்த்தாயின் தங்கமகனாக கருதப்பட்டவர் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர். தனது வாழ்நாளில் 55 ஆண்டுகளை பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்.
எளிமை மற்றும் நேர்மையின் அடையாளமாய் வாழ்ந்த அவரின் 115வது பிறந்த நாள் இன்று. இந்நன்னாளில் கர்ம வீரரின் எளிமையை வெளிப்படுத்திய ஒர் சம்பவம்..

சைரன் சத்தத்துடன்..
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றப் பிறகு தனது காரில் ஒரு பயணத்துக்காக கொன்றுக்கொண்டிருந்தாராம். அப்போது நடைமுறைப்படி முதல்வருக்கான கான்வாய் வாகனங்களும் சைரன் சத்தத்துடன் பாதுகாப்புக்காக சென்று கொண்டிருந்தன.

எனக்கு முன்பு ஏன் சங்கு?
இதனைக் கவனித்த பெருந்தலைவர், தனது காரின் உள்ளே இருந்த உதவியாளரிடம் முன்னே செல்லும் சைரன் கார்களை நிறுத்துமாறு கூறியுள்ளார். கார் நிறுத்தப்பட்டவுடன் அதிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து, நான் நன்றாகத்தானே இருக்கிறேன், எதற்கு எனக்கு முன்பு சங்கு ஊதிக்கொண்டு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறை..
முதல்வரின் இந்த கேள்வியை சற்றும் எதிர்ப்பாராத அதிகாரிகள் தங்களின் பாதுகாப்புக்காக நடைமுறைப்படி தான் செல்கிறோம் என கூறியுள்ளனர். உடனே குறுக்கிட்ட கர்மவீரர், தான்தான் முதல்வராக வரவேண்டும் என மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எந்த பாதுகாப்பும் தேவையில்லை
அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி அவர்கள் அச்சுறுத்தல் கொடுப்பார்கள். எந்த பாதுகாப்பும் தேவையில்லை. உதவிக்கு மட்டும் ஒரு கார் வரட்டும். மற்ற கார்கள் புறப்படலாம் என கூறியுள்ளார்.

வேறு என்ன இருக்க முடியும்?
இதனை எப்படி ஏற்பது என விழித்த அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை பெருந்தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதற்கான டீசல், சம்பளம் என பல வகைகளில் அரசுக்கு ஏற்படும் செலவு குறையும் எனக்கூறி கான்வாயை தவிர்த்துவிட்டாராம் பெருந்தலைவர் காமராஜர். அவரது எளிமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு என்ன இருக்க முடியும்..?
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications