தமிழக அரசின் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. ரூ.1 கோடி: கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ரூ1 கோடி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்று நேற்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய எண்களில் தி.மு.க.வை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மழை வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி அறிக்கை விவரம்:
மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
கடந்த பத்து நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்ற நிலையில், அவர்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை வெள்ள நிவாரண நிதிக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய்!
Read: https://t.co/lG4xtNegdp
— KalaignarKarunanidhi (@kalaignar89) November 17, 2015 மேலும் தமிழக அரசின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் என்பது ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் குறைவாகவே உள்ளதால், தமிழக அரசு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெரும் அளவுக்கு நிதியினைப் பெறவும், தமிழகத்தில் உள்ள வசதி படைத்தோரிடமிருந்து நிவாரண நிதி திரட்டிடவும் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications