கொடைக்கானல் பாதரசக் கழிவு விவகாரம்: தொழிலாளர்களுக்கு இழப்பீடு தர யுனிலீவர் நிறுவனம் சம்மதம்
கொடைக்கானல்: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொடைக்கானல் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி, நீதிமன்ற உத்தரவுப்படி தனது முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை தர சம்மதம் தெரிவித்துள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகரில் 1984 இல் அமைக்கப்பட்டது இந்துஸ்தான் யூனிலீவர் தெர்மா மீட்டர் தொழிற்சாலை நிறுவனம். இந்த நிறுவனத்தால் இங்குள்ள ஏரிகள், சுற்றுச் சூழல் நச்சுமயமாகத் தொடங்கியது.

இதையடுத்து இந்தக் கம்பெனியானது கடந்த 2001ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையால் மூடப்பட்டபோதிலும், இங்கு கொட்டப்பட்ட தெர்மா மீட்டர் பாதரசக் கழிவுகளில் 290 டன் கழிவுகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதை யூனிலீவர் நிறுவனத்தின் தலைமையகம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவ்விதம் அகற்றப்படவில்லை.

ஆலையின் பின்னால் இருந்த சோலைக் காட்டில் இந்தப் பாதரசக் கழிவுகள் கொட்டப்பட்டன. இந்தக் கழிவுகளால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, குழந்தைப்பேறு இல்லாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இறந்து விட்டனர்.

இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. ஆனால், இதுவரை தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என அதன் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட அந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்ற உத்தரவை ஏற்று சம்மதம் தெரிவித்துள்ளது இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி.
இதன்படி, சுமார் 1000 கோடி ரூபாய் அதன் முன்னாள் ஊழியர்களுக்கு இழப்பீடாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications