தங்கள் பகுதிக்கு வராததால் மினி பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள் - கோவில்பட்டியில் பரபரப்பு!
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வராததை கண்டித்து, பொதுமக்கள் இரண்டு மினி பஸ்களைச் சிறை பிடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திலிருந்து, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ் சேவை நடைபெற்று வருகிறது. இதில் மந்திதோப்பு பகுதிக்கு இரண்டு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காமராஜர் தெரு, அண்ணா தெரசா நகர், உள்பட பல்வேறு வழியாக மந்திதோப்பு கிராமத்துக்கு செல்லும். அந்த வகையில் வழித்தடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு பஸ்களும் கணேஷ் நகர், துளசிங்கநகருக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு மினி பஸ்களையும் எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கும், மாணவர்கள் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் சுமார் 150 பேர் கோவில்பட்டியில் இருந்து மந்திதோப்புக்கு சென்ற இரண்டு மினி பஸ்களையும் சிறை பிடித்தனர். எங்கள் பகுதிக்கு வந்து சென்றால்தான் மினி பஸ்களை விடுவிப்போம் என்று டிரைவர்களிடம் வாக்குவாதத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மினி பஸ் உரிமையாளரிடம் பேசி குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழித்தடத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications