For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு.. 4 மாணவர்கள் காயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சேலம்: சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில், 4 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கும் சண்முகம் என்ற மாணவருக்கும் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய மாணவர்கள் இடையே இன்று மாலை திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

Law collage students clash in Salem

இதையடுத்து, மாணவர் சண்முகம் தனது நண்பர்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரையும் கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் உட்பட 4 பேர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் நடுவே மோதல் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
4 students got injured while law collage students involved clash in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X