கேரளாவில் இருந்து லாரி லாரியாக கோழிக் கழிவுகள்.. மடக்கி பிடித்த பொதுமக்கள்.. நெல்லையில் பரபரப்பு
கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் வந்த லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: பணகுடி அருகே கேரளாவில் இருந்து வந்த கோழி கழிவு லாரிகளை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.
கேரளாவில் சேகரமாகும் கோழிக் கழிவுகளை பணகுடி காவல் கிணறு நான்கு வழிச்சாலையில் இரவு நேரத்தில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூர் நாற்றம் வீசிக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் இருந்து கோழி கழிவு, ரசாயன கழிவு, காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, நான்கு வழி சாலையில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக தார்பாயை லாரி டிரைவர் இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தவர்கள் இதனைப் பார்த்து பதற்றம அடைந்தனர். உடனடியாக அதனை தடுக்கவே டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர், இரண்டு மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து லாரியை எடுக்க முயன்றார். அப்போது காவல் கிணறை சேர்ந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில், முதலில் வந்த டிரைவர் ஆனந்த் என்பதும் அவர் திருவனந்தபுரத்திலிருந்து இந்த கழிவுகளை ஏற்றி வந்துள்ளதாகவும், இவைகளை வள்ளியூர் அருகே கொட்ட முயன்ற போது, அங்கிருந்த மக்கள் லாரியை சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது.
மேலும், வள்ளியூரில் வழக்கு பதியாமல் லாரியை திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்ல போலீசார் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு பதில் டிரைவர் ஆனந்த், பணகுடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு லாரியை நிறுத்தி கழிவுகளை இறக்க முற்படும் போது பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications