கேரளாவில் இருந்து லாரி லாரியாக கோழிக் கழிவுகள்.. மடக்கி பிடித்த பொதுமக்கள்.. நெல்லையில் பரபரப்பு
கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் வந்த லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: பணகுடி அருகே கேரளாவில் இருந்து வந்த கோழி கழிவு லாரிகளை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.
கேரளாவில் சேகரமாகும் கோழிக் கழிவுகளை பணகுடி காவல் கிணறு நான்கு வழிச்சாலையில் இரவு நேரத்தில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூர் நாற்றம் வீசிக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் இருந்து கோழி கழிவு, ரசாயன கழிவு, காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, நான்கு வழி சாலையில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக தார்பாயை லாரி டிரைவர் இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தவர்கள் இதனைப் பார்த்து பதற்றம அடைந்தனர். உடனடியாக அதனை தடுக்கவே டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர், இரண்டு மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து லாரியை எடுக்க முயன்றார். அப்போது காவல் கிணறை சேர்ந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில், முதலில் வந்த டிரைவர் ஆனந்த் என்பதும் அவர் திருவனந்தபுரத்திலிருந்து இந்த கழிவுகளை ஏற்றி வந்துள்ளதாகவும், இவைகளை வள்ளியூர் அருகே கொட்ட முயன்ற போது, அங்கிருந்த மக்கள் லாரியை சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது.
மேலும், வள்ளியூரில் வழக்கு பதியாமல் லாரியை திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்ல போலீசார் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு பதில் டிரைவர் ஆனந்த், பணகுடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு லாரியை நிறுத்தி கழிவுகளை இறக்க முற்படும் போது பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications